Thursday, July 05, 2018

புதுக்கோட்டை போஸ் நகர் அரசு நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு வண்ண ஆயத்த ஆடைகள் வழங்கும் விழா









சாந்தி (அமைதி) உண்டாகட்டுமாக. புதுக்கோட்டை போஸ் நகர் அரசு நடுநிலை பள்ளியில் இன்று 28.06.18 முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ண  ஆயத்த ஆடை மற்றும்  பள்ளிக்கு ஒலி பெருக்கியும் புதுகை UNWO  (ஐக்கிய நலக் கூட்டமைப்பு)  மூலமாக   வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார் தலைமையில்  அரசு பள்ளி தூதுவர் புதுகை செல்வா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் ..  கிளாசிக்  நூருல்லா,  மொய்தீன்,  அப்துல்லா,  மு.நகர் மன்ற உறுப்பினர் கண்ணன்,  பெற்றோர் கள், பொதுமக்கள். பெற்றோர் ஆசிரியர்கள் கழக உறுப்பினர்கள்,   இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.. இந்த நிகழ்வுக்கு உந்து சக்தியாக  இருந்தது பள்ளியின்  ஆசிரியர் அமிர்த தமிழ் அவர்கள்.  நன்றி. வண்ண ஆயத்த  ஆடைகள் வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி, பள்ளியின் தலைமை ஆசிரியர்,  ஆசிரியர்கள், மாணவர்கள்அனைவருக்கும் நன்றி.  வழங்க வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்த அல்லாஹ் விற்கு நன்றி.