Thursday, July 05, 2018

மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நமது காசுகள், பணத்தாள் மற்றும் தபால் தலை கண்காட்சி

சாந்தி உண்டாகட்டுமாக.  இன்று 15.03.18 புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல்  பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நமது காசுகள்,  பணத்தாள் மற்றும் தபால் தலை கண்காட்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முனைவர் ராஜா முகமது மேனாள் துணை இயக்குனர்  அருங்காட்சியகம்,  கல்வெட்டுகள் ஆராய்ச்சியாளர்கள் கரு.ராஜேந்திரன்,  மெட்ரிக் பள்ளி  ஆய்வாளர் மணிவண்ணன்., பெற்றோர்கள், ஆசிரியர்கள்,  பொது மக்கள்,  மாணவர்கள் மற்றும்  சுற்றுவட்டார பல அரசு பள்ளி மாணவர்கள் அதன் ஆசிரியர்கள் கலந்துகொண்டு கண்காட்சியை கண்டுகளித்தனர். பள்ளியின் தாளாளர் யுசுப், முதல்வர்  மற்றும்  ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லா புகழும் இறைவனுக்கு நன்றி.