சாந்தி உண்டாகட்டுமாக. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அரசர் குளம் அல்ஹிதாய ஜமாஅத் ஒரியண்டல் உயர் நிலைப்பள்ளியில் தபால் தலை, காசுகள் மற்றும் பணத்தாள் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை ஜமாஅத் தலைவர் டாக்டர் ஜமால் திறந்து வைத்தார்கள். தலைவர் ஹாஜி பீர் முகம்மது, பரக்கத்துல்லாஹ் மற்றும் பள்ளியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியின் பெருமை அறந்தாங்கி மாவட்ட கல்வி அதிகாரி திராவிட செல்வம், மாவட்ட கல்வி ஆய்வாளர் செல்வம் சில மணி துளிகள் கண்காட்சியை கண்டு சந்தோஷம் அடைந்தது கண்காட்சிக்கு கிடைத்த வெற்றி. அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பள்ளியின் செயலாளர் அபுதாலிப் அனைவரையும் வரவேற்க பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி நன்றி தெரிவித்து சிறப்பான ஏற்பாடு செய்து
பள்ளியின் தரத்தை நிர்வாகம் உயர்த்தி விட்டது. பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கண்காட்சியை கண்டுகளித்தனர். பிரிலியன்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களிடம் சந்தோசமாக கழிந்த நேரம் மறக்கமுடியாத நாள். நன்றி பள்ளியின் நிர்வாகிகள். மற்றும் எல்லா புகழும் இறைவனுக்கு.. நன்றி. நன்றி. நன்றி.......