Sunday, October 14, 2018


அஞ்சல் தலையில்  அண்ணல் காந்தி 150.

மகாத்மா காந்தி 150 வது ஆண்டு பிறந்த  தினத்தை முன்னிட்டு அஞ்சல் தலை மூலம் அறிவோம் காந்தியை என்ற தலைப்பில் மகாத்மா காந்தி தபால் தலை கண்காட்சி புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியில் முதல் கண்காட்சி 10.10.18 அன்று வெகு சிறப்பாக  நடைபெற்றது.   இவ்விழாவில் நாணயவியல் கழகத்தின்  கௌரவ தலைவர் முனைவர் ஜெ.ராஜா முகமது,  மகாத்மா காந்தி சமுக நலப் பேரவை நிறுவனர் முனைவர் தினகரன்,  அரசு பள்ளி  பாதுகாப்பு இயக்கம் மாவட்ட ஒருங் புதுகை செல்வா மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள்.  நன்றி மீனாட்சிசுந்தரம் மற்றும் தலைமை ஆசிரியர் சிவ சக்தி வேல்  சகோதரர்களின் பங்களிப்பு மகாத்தனது.

 கண்காட்சியில் இந்தியா, ஆப்கானிஸ்தான், கஜக்கிஸ்தான் , துர்க்மேனிஸ்தான்,டி சாட்,      பூட்டான், கியூபா, பல்வேறு உலக நாடுகளின் காந்தி      தபால் தலைகளை ஒரே இடத்தில்   காட்சிப்படுத்தி அதன் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாராம் குறித்து எடுத்துக் கூறப்படும்.

சுதந்திர இந்தியா அஞ்சல் தலைகளில் 1948 ஆம் ஆண்டு வெளியிட்ட காந்தி தபால் தலைகள், (1869 - 1969) காந்தி நூற்றாண்டு தபால் தலைகள், காந்தி, நேரு, தண்டி யாத்திரை, 125 வருட காந்தி தபால் தலை, 50வது ஆண்டு நினைவார்த்த தபால் தலை, உப்புச் சத்தியாகிரகம், 25, 30, 35, 50, 60 காசுகள் 1 ரூபாய் பொதுப் பயன்பாடு தபால் தலைகள் காட்சிப் படுத்தப்பட்டது. காந்தி நூற்றாண்டிற்காக வெளியிட்ட புகைப்பட அஞ்சல் அட்டைகள், இன்லேன்ட் கடிதம், விமான அஞ்சல் கடிதம் காட்சிப்படுத்தப் படுகிறது.மேலும் கரம்சந்த் காந்தி புத்திலி பாய் அம்மையாருக்கும் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை போர்பந்தரில் பயின்று ராஜ்காட் கத்தியவார் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் அப்பள்ளி ஆல்பர்ட் உயர்நிலைப் பள்ளி என பெயர் மாற்றம் பெற்றது. பதிமூன்றாம் வயதில் கஸ்தூரிபாயைத் திருமணம் செய்தார். 1889 முதல் 1893 ஆம் ஆண்டு காலங்களில் லண்டனில் சட்டம் பயின்றார். 1893 - 1904 காலங்களில் தென் ஆப்ரிக்கா செல்லும் போது அங்கு இருந்த நிறவெறி , அதிர்ச்சியை தந்தது. பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நிறவேற்றுமையால் காந்தி கீழே தள்ளிவிடப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது. அற வழியில்,அகிம்சை வழியில் சத்தியாகிரகப் போராட்டம் தென்னாப்பிரிக்காவில் 1904-1914 காலங்களில் நடைபெற்றது. 1915 காந்தி இந்தியா வந்தடைந்தார். இரவீந்திர நாத் தாகூர் அவரை மகாத்மா என்று அழைத்தார்.

1922ல் காந்திக்கு ஆறாண்டு சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டு 1924 ஆண்டு விடுதலை அடைந்தார். டிசம்பரில் பெல்காமில் தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1930 - 1942 காலங்களில் உப்பு வரிக்கு எதிராக சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார். 1930 மார்ச் மாதம் காந்தி 78 பேருடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து அரபிக் கடலின் கரையோரத்தில் இருந்த தண்டிக்கு 241 மைல் தூர பாதயாத்திரையை மேற்கொண்டார்.

25 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5ஆம் நாள் தண்டியை அடைந்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் ஒரு கையளவு உப்பை உலர்ந்த உப்பங்கழியிலிருந்து எடுத்து உப்புச் சட்டத்தை மீறினார். 1939ல் இரண்டாவது உலக யுத்தம் மூண்டது. 1947 மார்ச் பிரிட்டிஷ் அரசு பிரபு மவுண்ட்பேட்டனை வைஸ்ராயராக இந்தியாவிற்கு அனுப்பி ஆகஸ்ட் 15 விடுதலை அளிப்பதாக முடிவெடுத்தது. இந்திய சுதந்திரம் பெற்ற போது காந்தி கல்கத்தாவில் இருந்தார். இன்றும் காந்தியின் கொள்கைகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

1948 ஜனவரி 30 தேதி அன்று பிர்லா மாளிகைக்கு மனு, அபா இரண்டு பேத்திகளின் தோள்கள் மீது கரங்களை வைத்து மாலை 5.13 மணிக்கு பிரார்த்தனை இடத்திற்கு வந்தார். கூட்டத்தில் நாது ராம் விநாயக கோட்சே காந்தி மார்பில் மூன்று முறை சுட்ட போது ஹேராம் எனக் கூறி கீழே விழுந்தார்.

உடல் தகனம் செய்யப்பட்ட ராஜ்காட்டில் காந்தியின் சமாதியில் கடைசி வார்த்தையான ஹேராம் வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது என 1869 - 1948 மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைக்கும் வகையில் உலக நாடுகளில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலை, மினியேச்சர், செட் அ நெட், புகைப்பட அஞ்சல் அட்டை உட்பட இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலைகள், முதல் நாள் உறைகள், சிறப்பு உறைகள் காட்சிப்படுத்தப் படுத்த படும்.

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறும், சிந்தனை கருத்துகளும் மகாத்மா காந்தியை பற்றி  புதுக்கோட்டை நாணயவியல் கழகத்தின் தலைவர் பசீர் அலியின் சேகரிப்பை காட்சி படுத்தினார்.   நமது இலக்கு 150வது  கண்காட்சி செய்வது என்பது. நன்றி.