Thursday, November 10, 2022

வாசிப்பின் நேசிப்பதை அறிவோம்!!!

வாழ்க்கையில் சாதிக்க வேண்டியவை நிறையவே உள்ளன இந்த 21ம் நூற்றாண்டிலும் நம்மில் மண்டி கிடக்கும் சீர்கேடுகள் இன்றும் களையப்படாதது வேதனையளிக்கிறது. கலை இலக்கியம் கலாச்சாரம் போன்றவற்றை பேணிக் காத்தது ஒரு காலம் இன்று இலக்கிய உலகம் என்றாலே தீண்ட தகாதது போல பார்க்கப்படுகின்றது.
     நிறைய படைப்பாளிகள் வெறித்தனமாக எழுதித் தள்ளியது ஒரு காலம் இன்று அந்த நிலை மாறிவிட்டது இதற்கு காரணம் வாசிப்பு திறன் குறைவா அல்லது வெறுப்பா என ஆராய்ச்சியில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . 
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இளைஞர்கள் யுவதிகள் எல்லாம் கையில் புத்தகங்களோடு அலைந்தது மறக்க முடியவில்லை தினமும் ஒரு பத்திரிகை நாவல் புதிய இதழ்கள் என செக்கை போடு போடப்பட்டது நூலகங்களில் நிறைய பேர் ஆர்வமாக படித்ததெல்லாம் இன்று எங்கே போயிட்டு இப்படியே போனால் படைப்பாளர் என்ன ஆவான் சிந்தனைவாதிகள் என்ன ஆவார்கள் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டல் என்பதே இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது இதற்கு நிலைக்கு இந்த நிலைக்கு காரணம் என்ன பெருகிவரும் சினிமாவும் சின்னத்திரைகளும் என்றால் மிகை இல்லை பொழுதுபோக்கு என்பது வேறு வாசிப்பு என்பது வேறு ஆனால் இன்று வாசிப்பின் நேசித்து மறந்து போயிட்டு மாறாக இயந்திரத்தனமான சினிமா மாயை தொற்றிக் கொண்டு விட்டது புதிய படம் வெளியானால் யாருக்கு லாபம் தயாரிப்பாளர் நடிகர் நடிகைகளுக்கு தான் ஆனால் ரசிகர்களுக்கு செலவு தான் சிறிது நேரம் மகிழ்ச்சி கானல் நீர் ஆகிவிடுகிறது உலகிலேயே அதிகமான சினிமா ரசிகர்களும் கண்மூடித்தனமாக ஆதரவாளர்கள் தமிழகத்தில் தான் இருப்பார்கள் என்பது மறக்க முடியாத உண்மை பல கோடியில் செலவில் வெளியாகும் படத்துக்காக பல நூறு ரூபாய் செலவழிக்க துணியும் ரசிகனுக்கும் புத்தகங்களை வாங்க ஏன் மனம் வரவில்லை என்பதே நமது ஆதங்கம் வாசிப்பதால் வரும் இன்பம் ஒரு திரைப்படத்தை பார்ப்பதால் வந்துவிடுமா என்பதை உணர முடியும் யாரும் இல்லை இன்னும் கனவுகளிலே வாழ்க்கையை துடைப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர் 30 ஆண்டு கால இலக்கிய உலகை பின்னோக்கி பார்த்தோமேயானால் தமிழில் நம்ப முடியாத அளவுக்கு புதிய உத்வேகம் புதிய படைப்பாளிகள் சிந்தனைவாதிகள் என பலரும் நிளிர்ந்தனர் ஆனால் இன்று விரல்விட்டு என்னும் அளவிலேயே எழுத்தாளர்கள் உள்ளனர்.. ‌ நகைச்சுவை குழந்தைகளுக்கு நாவல் எழுதுவதற்கு யாராவது இருக்கிறார்களா என்றால் விடை ஜீரோ தான் இந்த இடைவெளிக்கு என்ன காரணம் ஊக்குவிப்பவர்கள் யாரும் கிடையாது வணிக நோக்கில் பத்திரிகைகள் வருவீர்கள் தங்களது வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன இன்றைக்கு பிரபலமாக பேசப்படும் எழுத்தாளர்களை ஊக்குவித்த பல ஜாம்பவான்கள் மறைந்து விட்டன அவர்களின் தாராள மனப்பான்மை தட்டிக் கொடுக்கும் தன்மை இன்று யாருக்கும் கிடையாது அனைத்துமே பொருளாதார ரீதியான வளங்களை பார்ப்பதில் தான் இருக்கிறது சிறந்த படைப்பாளனை விழிப்புணர் இன்று யார் இருக்கிறார்கள் சரி அது கூட பரவாயில்லை கதைகள் தொடர்கதைகள் நாவல்களை யாராவது பிரசிரிக்கிறார்களா அல்லது புதியவர்களுக்குத்தான் அந்த வாய்ப்புகள் தரப்படுகின்றனவா ஏதோ துக்கடா துணுக்குகளும் நகைச்சுவை துணுக்குகளும் தான் பத்திரிகைகளில் காணப்படுகின்றன இல்லாவிட்டால் டுவிட்டர் கதைகள் கால் பக்க கதைகள் ஏதோ பெயரளவுக்கு வெளியாகின்றன போதாக்குறைக்கு சின்னத்திரையில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை மெகா தொடர்கள் இரவில் தான் தூங்கப் போகும் போது சிரித்தவர்களின் காலம் மலை ஏறிவிட்டது.
  ‌ சோகம் அழுகையுடன் தொடர்புடையது இதனால் மன அழுத்தம் விரக்தி பழிவாங்கும் உணர்ச்சிகள் மேலோங்கி விடுகின்றன அப்புறம் இரவில் மனதில் எப்படி மகிழ்ச்சி பிறக்கும் குழந்தைகளை கண்டால் எரிந்து விழுவதும் கணவரை விரட்டி அடிப்பது மாதிரி பொழுது கழிகிறது இந்த சினிமா சின்னத்திரைகளை ஓரங்கட்டி விட்டு தரமான நூல்கள் புத்தகங்களை வாசிக்கும் போது அனைத்து உணர்வுகளும் நம்மை கட்டி போடும் சினிமா தொடர் நாடகங்களை புறந்தள்ளி வாசிக்கும் பழக்கத்தை இல்லத்தரசிகள் தொடங்க வேண்டும் இதனால் புதிய சிந்தனைகள் மன நிம்மதி அலற்றல் இல்லாத வாழ்க்கை நிச்சயம் இதற்காக சினிமா சின்னத்திரையை அறவே புறக்கணிப்பதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை எதுவும் அளவாக இருக்கட்டும் மேலும் இளைய சமுதாயத்தின் எழுத்து திறமை வாசிக்கும் பழக்கம் மறந்து போகாமல் இருக்க உதவ வேண்டியது படித்தவர்களின் கடமை இன்னும் இதே நிலை நீடித்தால் பழைய எழுத்தாளர்களின் படைப்புகளை மறுபிரசுரம் செய்ய வேண்டும் அபாய கட்டம் பத்திரிகைகளுக்கு நேரிடும் எனவே முதியவர்களை வளர்க்க உதவுங்கள் அல்லது வழிகாட்டுங்கள் என்பதே நமது ஆதங்கம்.
நன்றி.... (பச்சை ரோஜா ஜுன் 2011)