Tuesday, October 23, 2018

மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது ஆண்டை போற்றும் வகையில் 150 பள்ளிகளில் தபால் தலைகளை காட்சிப்படுத்தி வரும் புதுகை நாணயவியல் கழக தலைவர் அய்யா திருமிகு . Shaik Dawood Basheer Ali அவர்கள் இன்று மூன்றாவதாக எங்கள் பள்ளியில் தபால் தலைகளை காட்சிப்படுத்தி பெருமகிழ்ச்சி அடையச் செய்தார். அவர் கொண்டுவந்திருந்த அத்தனை தபால் தலைகளும் காந்தியடிகளின் அவ்வளவு தகவல்களை தன்னுள்ளே கொண்டிருந்தது...

முன்னதாக நிகழ்வினை சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்த திருமிகு. வைர. தினகரன் அவர்கள் (தலைவர், அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை ) கண்காட்சியை திறந்து வைத்தார். நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு. Dhanalakshmi , வாசகர் பேரவை தலைவர் அய்யா பேரா. விஸ்வநாதன், பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாணவர்கள் மிக ஆர்வமாக கண்காட்சியை கண்டுகளித்தனர். மணர்வர்களுக்கு போட்டிகள் வைத்தும், கண்காட்சியில் கண்டவற்றை குறித்து கேள்விகள் கேட்டும் பரிசளிக்கப்பட்டது...

மீண்டும் ஒருமுறை நன்றி பஷீர் அலி அய்யா!!!