Friday, October 22, 2021

"மனித நேய மாண்பாளர்" விருது

சாந்தி உண்டாகட்டுமாக.  12.01.19 சனிக்கிழமை மாலையில் புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகமும் மற்றும் திருவருள் பேரவையும் இணைந்து நடத்தும் பொங்கல் நல்லிணக்க விழாவில் அடியேனுக்கு "மனித நேய மாண்பாளர் "விருது வழங்கப்பட்டது. இந்த 2019 ஆண்டுக்கு தேர்வு செய்த கழக மற்றும் பேரவையின் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.  விருதை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் வழங்க பெற்றுக்கொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில்  மும்மதத்திலிருந்தும்( ஒருவர் வீதம் ) மனித சமுதாயத்திற்கு சிறப்பாக சேவையாற்றும் மூவரை தேர்வு செய்து விருது வழங்குகிறார்கள்.   இறைவன் நம் மனித  சேவையைப் பொருந்திக் கொள்ள இறைஞ்சி வேண்டுகிறேன்.  இந்த  ஆண்டு என்னை தேர்ந்தெடுத்த நல்லுள்ளங்களுக்கு நன்றி. இறைவனுக்கு நன்றி.  எல்லா புகழும் இறைவனுக்கு,   நன்றி.. நன்றி....நன்றி......