Thursday, April 20, 2023

ஈதுல் பித்ரு 2023 பெருநாள்‌‌ அன்பளிப்புகள்


   அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் அன்பும் அருளும் என்றென்றும் உண்டாகட்டுமாக!    

‌ஈதுல் பித்ரு ( பெருநாள் தர்மம்) பெருநாள் நாளை (22/04/23) வரப்போகிறது அனைவருக்கும் ஈதுல் பித்ரு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

 ஒரு சீன பழமொழி உண்டு 
மீனை கொடுப்பதற்கு பதிலாக மீனை பிடிப்பதற்கு கற்றுக் கொடுக்கவும் என்று சொல்லுவார்கள். 

 அதே போல 1400 ஆண்டுகளுக்கு முன்பு எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் யாசகம் கேட்டார்,  அதற்கு நபி (ஸல்)அவர்கள் உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். என்னிடம் ஒரு போர்வை மட்டும்தான் உள்ளது என்று அந்த யாசகம் கேட்டவர் கூறினார்,  உடனே அதை தா என்றார்கள் அந்த போர்வையை ஏலம் விட்டு இரண்டு திர்ஹம் கிடைத்தது அதில் ஒரு திர்ஹத்தை அவருடைய குடும்பம் பசியாறுவதற்கு உணவு பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறும் ஒரு திர்ஹத்திற்கு கோடரியை வாங்கி கொடுத்தும் இந்த கோடாரியை கொண்டு விறகு வெட்டி தொழில் செய்து கொள் என்று அறிவுரை வழங்கி, யாசகம் கேட்பதை காட்டிலும் தொழில் செய்து முன்னேறுவது தான் சிறந்தது என்று எடுத்துக் கூறினார்கள்.
 அதன் அடிப்படையில் இன்று ஒரு குடும்பத்திற்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. நன்றி.  
ஏழைகளுக்கு மளிகை பொருட்கள் அரிசி வழங்கப்பட்டது.
ஐக்கிய நல கூட்டமைப்பின்(unwo) சார்பாகவும் இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் அல்லாஹ் இவ்வுலகிலும் மருவுலகிலும் சிறப்பாக்கி வைப்பானாக என்று துவா செய்த வண்ணமாக நன்றிதன்னை தெரிவித்துக் கொள்கிறேன். 
புகழ் அனைத்தும் இறைவனுக்கே.