Showing posts with label அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க சிறந்த நூலகமே காரணம். Show all posts
Showing posts with label அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க சிறந்த நூலகமே காரணம். Show all posts

Tuesday, December 26, 2023

காசிம் புதுப்பேட்டையில் அன்னை ஆயிஷா ( ரலி) ஞானக் கருவூலகம் திறப்பு விழா 23 12 23 அன்று நடைபெற்றது.

தங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக ..
23 .12. 23 சனிக்கிழமை எனது "ஞானக்கருவூலகம்" நூலகத்தை நம் மாண்புமிகு மண்ணின் மைந்தர் அமைச்சர் சிவ. வீ. மெய்ய நாதன் அவர்கள் திறந்து வைக்க அதைத் தொடர்ந்து கந்தர்வகோட்டை எம்எல்ஏ Chinnadurai Marimuthu  சிறப்புரை வழங்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மாநிலத் துணைத் தலைவர்  நா முத்துநிலவன் வாழ்த்துரை வழங்க சிறப்பாக நூலக திறப்பு விழா அமைவதற்கு மிகவும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க  ராசி.பண்ணீர் செல்வம் முதலிய மாவட்ட பொறுப்புதாரிகள் அனைவருக்கும், வடகாடு கிளையின் செயலாளர் மு ராஜா  (தாய்த் தமிழ்பள்ளி  வடகாடு) அவர்களுக்கும், தேனியைப் போல் சுறுசுறுப்பாக இயங்கும் அறிவொளி கருப்பையா அவர்களுக்கும்  வடகாடு கிளை  தோழர்களுக்கும்  ஆசிரிய பெருமக்களுக்கும் விழாவிற்கு முத்தாய்ப்பாய் நெடுவாசல் தோழர் Ramkumar Ramachandran  அவர்கள் 70 புத்தகங்களை பரிசாக கொடுத்து மகிழ்ந்தார்கள் அவர்களைப் போல புதுகை Peer Mohamed புத்தக சீர் வழங்கி சிறப்பித்தார்கள் மற்றும் நிறைய பேர் புத்தகங்களை வழங்கியதும், புத்தகங்களை வழங்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மிகுந்த நன்றிதனை தெரிவித்துக் கொண்டும் வந்திருந்து விழாவை சிறப்பித்த அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்த எளிமையான விழா சிறப்படைய உழைத்த அத்தனை தோழர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி.. 
எல்லா புகழும் இறைவனுக்கே.