Monday, December 02, 2024

சிறந்த தனிநபர் நூலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கினார்

சிறந்த தனிநபர் நூலகத்திற்கான இந்த ஆண்டின் விருதினை நாணயவியல் சங்கத் தலைவர், சமூக சேவகர், 
காசிம் புதுப்பேட்டை ‘ ஞானக் கருவூலகம்’ நூலகத்தின் நிறுவனர் ஹாஜி சேக்தாவுது பஷீர்  அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி அருணா இ.ஆ.ப அவர்கள்
29.11.2024 அன்று வழங்கினார்கள்.
மாவட்ட நூலக அலுவலர் அ. பொ. சிவகுமார், நூலகர் கண்ணன், வாசகர் வட்டத் தலைவர், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி
உடனிருந்தனர்.

கீரமங்கலம் அருகே காசிம் புதுப்பேட்டை கிராமத்தில் சொந்த செலவில் நூலகம் நிறுவி, மாணவர்கள், பொதுமக்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராவோர் பயன்பாட்டுக்கு வழிவகுத்த அன்புச் சகோதரர் சே. தா. பஷீர் அலி அவர்களின் சமூகப் பங்களிப்பு மிகுந்த
பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.