Monday, September 23, 2024

திருச்சி பணத்தாள் சேகரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக நாணயம் தபால்தலை பணத்தால் கண்காட்சி 20/ 9/ 24 முதல் 22/ 9/ 24 வரை நடைபெற்ற திருச்சியில் நடைபெற்றது.

புதுகை நாணயவியல் கழக தலைவருக்கு கௌரவ விருது! 

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தால்கள் நாணயங்கள் தபால் தலைகள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.பத்மஸ்ரீ சுப்புராமன் கண்காட்சியினை திறந்து வைத்து, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில், செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், கமலக்கண்ணன், சந்திரசேகரன், அரிஸ்டோ உள்ளிட்டோர் முன்னிலையில் புதுகை நாணயவியல் கழகத் தலைவர் ஷேக் தாவூத் நாணய சேகரிப்புக்கலை மூலம் நாட்டின் வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்ற வரலாற்று பதிவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைத்தமையை பாராட்டி பாரம்பரிய காவலர் கௌரவ விருதினை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு மாநில, மாவட்ட சேகரிப்புக்கலை கலைஞர்கள் பங்கேற்றனர்.